Flowers - Myspace Glitters

செவ்வாய், 30 ஜூன், 2009

அப்துல் ரகுமான்

கூலிக்கு மாரடித்து
சொற்களைப் பொறுக்கி
எடைபோட்டு
சுடச்சுட வரிகளாக்கி
கூவிக் கூவி விற்போரிடையே

சொல்லோடு பொருள் உரச
வார்த்தைகளைப் பிளந்து
வைரக்கற்களை
வீதிகளில
விசிறி எறிந்தவன்

திங்கள், 29 ஜூன், 2009

இருள் தந்த வெளிச்சம்




வண்ணங்களைக்
கரைத்து
அடுக்கி வைத்தக்
கிண்ணங்களில்
ஊற்றி வைத்தேன்

மயிலிறகை
ஈர்க்குச்சியில் முடிந்து
வண்ணக் கலவையில்
முக்கியெடுத்து
வெற்றுப் பலகையில்
வரைய முனைந்தேன்

விரலை விட்டு
இறங்கிவர மறுத்து
துவண்டுப்போன தூரிகைக்குள்
ஓவியம்
நொண்டியடித்தது

அத்தனை வண்ணங்களையும்
அள்ளியெறிந்து
அண்ணாந்துப் பார்த்தேன்
செல்லரித்த சுவற்றினூடே
ஓர் உயிரோவியம்
மெல்ல நகர்ந்துச் செல்ல
அந்த இருளில்
விழிகள் மட்டும் வெளிச்சமாய்….

வெள்ளி, 26 ஜூன், 2009

நீ


என் வாழ்க்கைப்
புத்தகத்திற்கு
முகவரியானாய்

தாறுமாறாய் கிடந்த
தலையங்கத்தை
ஒட்ட வைத்தாய்

எழுத்துக்களைப்
பின்னி
வலைப் பூவாக்கினாய்

உன் கிறுக்கலில்
நவீன ஓவியமானேன்

நீ ஒற்றைச் சொல்
உணர்ச்சிக் காவியமானாய்

புத்தகத்தைத் திறந்து பார்த்தேன்
ஒரு சில பக்கங்கள் மட்டும்
ஏன் இன்னும்
எழுதப்படாமலே
வெற்றிடமாய் ...

திங்கள், 22 ஜூன், 2009

பயணம்

தண்டவாளத்தில்
கைகோர்த்து தனித்தனியே
பயணம் செய்கிறது
வாழ்க்கை

குறுக்குத்தடத்தில்
வழிமாறினாலும்
சுமைதாங்கியே
பயணம் நீள்கிறது

நீட்சிகளின் முடிச்சி
மெளனங்களில்
கரைந்தாலும்
இந்த வண்டி
ஓடிக்கொண்டேயிருக்கிறது

பூமாலைகள்


பிறப்பின்
பரிணாம வளர்ச்சியை
ஞாபகப்படுத்தோடு
பின்பற்றி
கையில்
பூமாலைகளோடு
அரச மர நிழலில்

வெறுந்தரையில்


புற்களோடு பனித்துளிகள்
மோகத்தில் திளைத்திருக்க

வெடித்துச்சிதறிய
பஞ்சுகளோடு
வண்ணத்தூரிகைகள்
மூச்சுமுட்ட சிக்குக்கோலங்களை
வரைந்து தள்ளின

கார்மேகம் புறப்பட்டு
காலாட்படையோடு
வந்து சென்றது

போர் ஓய்ந்துவிட்ட
வேளையில்
அந்த
அதிகாலையை
வெறுந்தரையில்
தேடுகிறேன்

திங்கள், 15 ஜூன், 2009

குயில் கூவும் சத்தம்

ஏழிசையை சுரத்தோடு பாடுகையில்
தாளம் மட்டும் தப்பிச் சென்றது

தேடிப்பிடித்து வந்த ஆந்தை
கண்விழித்து காவல் காத்தது

கண்மூடிய வேளையி்ல்
பச்சைக்கிளி பறந்து வந்து
கொஞ்சும் மொழி பேசியது
மூக்குடைந்த கிளி
நொண்டிச் சென்றபின்
அங்கே ஒரு குயில் மட்டும்
கூவும் சத்தம் இன்னும் கேட்கிறது

வெள்ளி, 12 ஜூன், 2009

நான்

மெழுகுவர்த்தியை
அணைத்தேன்
நிலவைக் கண்டேன்
‘தான்’ உருகி வழிந்தோட
அந்த இருளுக்குள்
‘நான்’ வெளிச்சமானேன்

உயிர் மரத்தை உலுக்கி...

மாதக்கணக்கில்
சுமக்காமல்
கணநேரத்தில் பெற்றுப்
போடுகிறேன்

ஒருசில தொட்டிலில்
மற்றவை அனாதைகளாய்

சிலவற்றைத்
தாலாட்டுகிறேன்
மற்றவற்றை
கருக்கலைப்பு செய்கிறேன்

நாட்கள்
சிலநேரமென்னை மலடியாக்குகிறது
பலநேரெமனக்குக் கிரீடம் சூட்டுகிறது

இவளுடனான மோகத்தில்
என் ராத்திரிகள் கரைகின்றன

இதயக்குழாயடியில்
புதுரத்தம் குடிக்க அந்த
நரம்புக் குடங்கள்
வரிசையில் காத்துக்கிடக்கையில்

உயிர்மரத்தை உலுக்கி
பெற்றுப்போட்ட களைப்பில்
மூச்சுவிடவும் மறந்து போகிறேன்

இன்பா

அழகானப் பொய்

அழகான முடிச்சுகளின்
நெளிவு சுளிவுகளோடு
பட்டுக்குள் ஒளித்து
மோதிரப்பரிசு தந்தாய்

நாட்கள் தன்னைத்தானே
சுற்றி சூரியனை ஓர் வலம்
வந்து முடித்தபோது
பட்டுச்சேலை பரிசு தந்தாய்

குழந்தையொன்று
அம்மையப்பனைச்
சுற்றி வந்து நின்ற போது
பருத்திச்சேலை பரிசு தந்தாய்

அடுத்தடுத்தாண்டுகளில்
வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகளோடு
காகிதப் பரிசானது

பரபரவென்று
பத்தாண்டைத் தொட்டுவிட்டது
பத்து பவுன் நகையோடு நீ
வருவாயென இருந்தேன்

பத்திரமாற்றுத் தங்கம்
நானே பரிசாக என்றாய்

தேய்பிறையில்
தொய்ந்த நிலவுக்கு
இந்தப் பொய்யும்
அழகானது தான்

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தேவதைகள்

எலும்புத் துண்டை தூக்கி
எறிந்தால் வாலாட்டும்
நாய்கள் என நரிகள் களிக்க
குள்ள நரி சாயம்

வெளுத்துப்போச்சு
டும் டும் என
நாய்கள் கொண்டாட
நரிகள் ஊளையிட
நாய்கள் குரைக்க

கூத்தாடிகளுக்குக்
கொண்டாட்டம்
நடுத்தெருவில்
தேவதைகள்
திண்டாட்டம்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

நார்வே நடந்து பார்த்தது
அமைதிப்புறா அலைந்து பார்த்தது
அகிம்சை அல்லல் பட்டது
ஆயுதம் தலை தூக்கியது
புலிகள் பதுங்குவது
பாய்வ‌த‌ற்கென்றாலும் கிளிகளின்
சிறகொடியும் ஒலிகள் கேட்கிறதா
வலிக்கிறது மனம்
சிறை பிடித்த
சீதையின் துயர்துடைக்க
அனுமன் சென்றான் தூது
முன்தோன்றிய
மூத்தக்குடி காக்க அதிபதிகள்
அணுவைக் கூட அனுப்பவில்லை தூது
முல்லைக் காடு இடுகாடாகிறது

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக்குமரன் -இலங்கையில் போர்நிறுத்தக் கோரி தீக்குளித்தவர்

அங்கேச் சுடுகிறான்
இங்கே சுட்டுக்கொண்டாய்

உன்னைப் பறித்தது
தமிழ்ப் பற்றோ
அரசியல் பற்றோ
நாட்டுப் பற்றோ...
உன் உயிர்ப் பற்று
எங்கேப் போனது?

பத்தோடு பதினொன்று
அத்தோடு நீயுமொன்றென
துதி பாடி
இரங்கற்பா எழுதிவிட்டு
தூசி தட்டி துப்பாக்கித்
தூக்கிவிட்டான்

ஆட்டுமந்தைபோல்
கை கால் இழந்து
பாம்புக் கடி மறத்தவனை
ஓருயிர்
சரித்திரம் மாற்றிவிடுமென
தப்புக் கணக்குப் போட்டாயே?

சாதிக்கப் பிறந்தவன் நான்
சாகப் பிறந்தவனில்லை யென
பாசக்கொடி நீ தூக்கி
அடக்குமுறையை
அடக்கம்
செய்ய மறந்தாயே?

உனக்கு நீயே
கொள்ளியிட்டாய்
உன் குடும்பத்தை
தவிக்கவிட்டாய்
உன் இழப்பைத் தவிர
வேறென்ன லாபம்?


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

துடுப்புகள்

உறங்கி கிடக்கும்
சொர்க்கத்தை உசுப்பிவிட
அறிவுக் கடலில் ஆழம் தேடி
உறங்கிப் போன மனிதர்களுக்கு
ஒளிந்து கிடக்கும் உண்மைகளை
அமிழ்ந்து போகும் அமுதங்களை
அடையாளம் காட்டத் துடிக்கும்
ஞானத் துடுப்புகள்
பேனா முட்களுடன்...

சனி, 31 ஜனவரி, 2009

நான்

தெரியுமென்றேன்
தேடுதல் குறைந்தது

வேண்டாமென்றேன்
தௌpவு குறைந்தது

முடியாதென்றேன்
திறமை குறைந்தது

மேம்போக்காகவிருந்தேன்
உற்சாகம் குறைந்தது

பகிர்ந்து கொண்டேன்
அனுபவம் கிடைத்தது

திருத்திக் கொண்டேன்
தவறுகள் குறைந்தது

உணர்ந்து கொண்டேன்
அறிதலின் இரகசியத்தை

புரிந்து கொண்டேன்
அறிவுப்பசி தான்
ஆழ உழுமென்று

நம்பிக்கை


பாலும் தேனும்
பார்த்து பார்த்து
ஊட்டவில்லை

அந்தக் கால்
இந்தக் கால்
பந்தக் கால்
பாசக்கால்

என எந்தக் காலும்
வேண்டாமுன்
சொந்தக் காலில் நில்
என ஊட்டி
வளர்த்ததால்தானோ
என்னவோ

நாற்றங்காலை
நாடு மாற்றி
நட்டபின்னும்
ஒட்டுறவின்றி
ஒற்றைக்காலிலும்
ஊன்றி நிற்கின்றேன்

பிரிவு

விழியோடு விரல்
பேச நேரமில்லை
விழியின் கசிவைத் துடைக்க
விரலுக்கு நேரமில்லை
விரலின் வீக்கம் காண
விழிகளுக்கு நேரமில்லை
உனக்கு நொட்டப்
பார்வையென விரலும்
நீ குட்டிக்கொண்டேயிரு
என விழியும் கட்டிப்புரண்டபின்
இனி விரலுக்கும்
விழிக்குமேது பந்தம்










வியாழன், 29 ஜனவரி, 2009

நிழல்கள்

என்னைப் பின் தொடரும்
நீ உளவாளியா அல்லது
கரும்பூனை காவலாளியா

நடந்தால் நடக்கிறரய்
நின்றரல் நிற்கிறரய்
நான் சொன்னபடி கேட்கும்
ஒரே ஜPவன் நீ

கருப்பு மையில் வார்த்தெடுத்த
என் குளோனிங்
என் இருண்டப் பக்கம்

இரவைக் கண்டால்

ஒட்டிக் கொள்கிறரய்
இரவியைக் கண்டால்
ஓடி விடுகிறhய்

நான் நிற்கும்போது
நீ மட்டும் படுத்திருக்கிறரயென
உன்னைத் துரத்தி துரத்தி
மிதிக்க முனைந்த நாட்கள்
இன்னும் நினைவில்

திட்டினாலும் அழுவதில்லை
வெட்டினாலும் நகர்வதில்லை
நாம் ஒட்டிப் பிறந்த
இரட்டைப் பிறவிகள்

ஆனால் ஆச்சர்யம்
எனக்கில்லாத பொறுமை
உனக்கு மட்டுமெப்படி


இருளைக் கொளுத்தும்

விளக்குகள்

தீவிரவாதம்