Flowers - Myspace Glitters

திங்கள், 30 ஏப்ரல், 2007

அமைதி



கவலை கழிந்து அமைதியில் வாழ
ஆர்வம் கொண்டேன்
தோன்றிய உலகில் சோதனைகளுக்கு
ஓய்வென்றுமில்லை
காரணமின்றி கடிந்து கொண்டன
கவலைகள்
நாகரிக சுகத்தில் நனைய
நினைத்ததில்
ஐம்புலனும் உணர்த்தியது
அறியாமையை
சுகத்திற்கு வடிவமில்லை
எல்லையில்லையென்று
ஆய்ந்து தெளிந்ததில்
எட்டியது எனக்கும்
அகந்தை அலை ஓய்ந்து
மூடியதிரை விலகியது
புலன்களை மூடிவிடு; எண்ணங்கள்
தரும் அமைதி என்றது ஆழ்மனம்
முயன்று பார்க்கிறேன் இன்றுவரை
எட்டாக்கனியாகவே
என்றாவது ஒரு நாள்
எனக்கும் திருவினையாகும்