Flowers - Myspace Glitters

திங்கள், 30 ஏப்ரல், 2007

அமைதி



கவலை கழிந்து அமைதியில் வாழ
ஆர்வம் கொண்டேன்
தோன்றிய உலகில் சோதனைகளுக்கு
ஓய்வென்றுமில்லை
காரணமின்றி கடிந்து கொண்டன
கவலைகள்
நாகரிக சுகத்தில் நனைய
நினைத்ததில்
ஐம்புலனும் உணர்த்தியது
அறியாமையை
சுகத்திற்கு வடிவமில்லை
எல்லையில்லையென்று
ஆய்ந்து தெளிந்ததில்
எட்டியது எனக்கும்
அகந்தை அலை ஓய்ந்து
மூடியதிரை விலகியது
புலன்களை மூடிவிடு; எண்ணங்கள்
தரும் அமைதி என்றது ஆழ்மனம்
முயன்று பார்க்கிறேன் இன்றுவரை
எட்டாக்கனியாகவே
என்றாவது ஒரு நாள்
எனக்கும் திருவினையாகும்

வியாழன், 29 மார்ச், 2007

About Book


I have read the book 'Men are from Mars, Women are from Venus'. Its an excellent book and practical guide for improving communication and getting what we want in our relationships. Each men and women need to read.. It was written by John Gray, its a non-fiction but it will help us to understand each other better, its an invaluable tool for developing deeper and more satisfying relationships... I read but not sure my understanding develops deeper and deeper, I feel that my level of understanding move towards better....

the meal grows cold
the anger is allayed
the sore begins to heal
to consider deliberately
due to insatiable hunger
the grief has not abated
---- What is the meaning of the above, no specific meaning... but just like that...

செவ்வாய், 27 மார்ச், 2007

என் பார்வையில்


சில்லென்று ஒரு ஈரம் படர்ந்தது நெஞ்சில்
விசா வந்து விட்ட சேதி கேட்டு

அலைந்தது மனம் ஆயிரம் கனவுகளைச் சுமந்து
டிக்கெட் வாங்குமுன்னே சிங்கப்பூர் சென்று சென்று வந்தது

வத்தலும் ஊறுகாயும் வாஞ்சையோடு கட்டி
பட்டமிடும்போது வட்டமிட்டு பறந்த விமானத்தின் மடிகளில் இப்போது

குளிரின் நடுவில் வண்ண வண்ண சேலையில்
மயில்கள் அங்குமிங்கும் நடமாடி
புடம் போட்ட புன்னகையில் உபசரித்தன

சொர்க்க வாசல் ஏகாதசி அன்று மட்டுமா திறக்கும்
அந்த பரலோகச் சொர்க்கம் மண்ணுக்குள்ளே
எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது

ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தில் பார்த்த டால்பின்
பக்கத்தில் வந்து சிலுப்பிச் செல்கிறது

கயத்துமேல குச்சித்தூக்கி நடப்பதுண்டு
கார்முகிலைக் காண கயிரின் மேல் கார்களின் ஊர்வலம்

கண்டக்டரக் காணோம் பஸ்ல
டிரைவரையும் காணோம் டிரெய்ன்ல

தக தகவென தங்க மீன்களின் நாட்டியம் காண
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கடல்பெட்டி

எதிலும் எங்கேயும் பிரம்மாண்டம்
பலவினப் பல்லாக்குகளைப் பார்க்க நேர்ந்தாலும்

இயந்திரமாகிப்போன மனித வாழ்க்கையில்
மாறிவிடாத மனிதம் மட்டும் அப்படியே

திங்கள், 26 மார்ச், 2007

என்னை தூக்கி நிறுத்தியவற்றுள் ஒன்று

தேடிச்சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதை பேசி - பிறர்
வாட பல செயல் புரிந்து மனம் வாடி
துன்புமிக உழன்று -நரை
கூடி கிழப்பருவமெ ய்தி
கொடுங்கூற்றுக் கிரையென பின்
மாயும் பல வேடிக்கை மனிதர்களைப்போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

பெருவிரைவு இரயில்



கிழக்கும் மேற்குமாய்
தெற்கும் வடக்குமாய் உன்
ஒய்யாரா சிங்கை நகர் வலம்


விடியத் தவறினாலும் நொடி தவறாமல்
படு சுட்டியாய் பக்கத்தில் வந்து நிற்கிறாய்

செங்கதிரோணும் உன் வரவைக்கண்டுதான்
சோம்பலாய் துயிலெழுகிறான்

உன்னுடன் அமைதிப் பயணத்தில் ஆழ்ந்த
நித்திரையும் கைகூப்பி அழைக்கிறதே

தேன்முலாம் பூசிய சொற்களில்
அவ்வப்போது அறிவிப்புக் குயில் கூவி எழுப்புகிறது

அரைமணி அலுவல்
பயணமானாலும் என் கவி அருவி
ஊற்றெடுக்கும் உற்சாகத் தளமும் நீயே

உன்னைத்தேடி நாங்கள் நடக்கவில்லை
தாயைக் கண்ட குழந்தையாய் எங்களைத் தேடி
ஓடி வந்து சுமக்கிறாய்

நீ ஒரு மண்புழு தான்
மண்ணுக்கு உள்ளும் புறமும்
ஊர்ந்து விளையாடுகிறாய்
பூமிக்குள் மு்ச்சடக்கி வெளியில் வந்து விடுகிறாய்

சில நேரங்களில் உருமுகிறாய்
இத்தனைபேரை விழுங்கியும் இன்னுமா அடங்கவில்லை உன் தாகம்
அடங்காப் பசியோடு ஆட்களை அள்ளிக்கொண்டு போக
சிறுத்தைபோல் சீறி வருகிறாயே…

நீ பலருக்கு வரப்பானாய்
நீயின்றி வேறு வழியேது எங்களுக்கு

உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு
அனகோண்டாவை நினைக்கத் தூண்டுகிறது

நீ காற்றின் தோழனா இளங்காற்றில் கலந்து செல்லமாய்
நிலையங்களைத் தொட்டுத் தொட்டுச் செல்கிறாயே…

சோர்வின்றி முகிலாய் நீ அலைந்தாலும்
உன் புகழ் வேறு தேசம் சென்று
எரிவதெப்போது?

முள்ளும் மலரும்


முள்ளும் மலரும்

மலருக்கு முள் அழகு தான்
முள் மலரைக் குத்தினால்

இமை மு்டித் திறக்கும் முன்
மலரிதழில் கீறல்

வலி மறைந்து போனாலும்
வடு மறைவதில்லை
அந்த மடை திறந்தால் மடுபோல் நீளும்

மலர் வாசனை முள்ளுக்குச் சொந்தமானால்
மண்வாசனை மறத்தா போகும்

மலர் மணம் வீசலாம் - அதில்
தீபமேற்றினால்

முற்றிய முள்ளென்று நெருங்கிப் பார்த்தால்
குத்தியே ருசிகண்ட முள்
கீறியது நெருஞ்சியாய்

முள்மேல் மலர் விழுந்தால்
சேதாரம் இதழுக்குத்தான்

முள் குத்தி முறிந்திடுமா செடி
முள்ளில்லா மலரும் மணக்கிறதே