Flowers - Myspace Glitters

திங்கள், 26 மார்ச், 2007

முள்ளும் மலரும்


முள்ளும் மலரும்

மலருக்கு முள் அழகு தான்
முள் மலரைக் குத்தினால்

இமை மு்டித் திறக்கும் முன்
மலரிதழில் கீறல்

வலி மறைந்து போனாலும்
வடு மறைவதில்லை
அந்த மடை திறந்தால் மடுபோல் நீளும்

மலர் வாசனை முள்ளுக்குச் சொந்தமானால்
மண்வாசனை மறத்தா போகும்

மலர் மணம் வீசலாம் - அதில்
தீபமேற்றினால்

முற்றிய முள்ளென்று நெருங்கிப் பார்த்தால்
குத்தியே ருசிகண்ட முள்
கீறியது நெருஞ்சியாய்

முள்மேல் மலர் விழுந்தால்
சேதாரம் இதழுக்குத்தான்

முள் குத்தி முறிந்திடுமா செடி
முள்ளில்லா மலரும் மணக்கிறதே

கருத்துகள் இல்லை: