Flowers - Myspace Glitters

புதன், 4 நவம்பர், 2009

தீஞ்சுவை

‘மெக்டனால்டு’ வாசலி்ல்
நி
ன்

கூட்டம் திடீரென
கலைந்தது

பட்டுப்பூச்சி
பறந்து வந்ததோ
திரும்பிய போது
எண்புதோல் போர்த்தி
நடந்து வந்த உயிரி
வரிசையில் நிற்க…

கலைந்தது கூட்டம்
உனக்கு விற்பனையில்லையென
கடைக்காரன் விரட்டியடிக்க
வாசலில் வந்தமர்ந்தான்

பரதேசிக்கு
‘பர்கர்’ ஒரு கேடா
தொடை தட்டி
‘தடா’ போட்டதொருக் கூட்டம்

பிஞ்சு மொழி
கேட்டதங்கே
‘அவர்கள் சாப்பிட்டால்
தவறா’ வென

‘உன் தட்டைப் பார்த்து
சாப்பிட்டு விட்டு
எழுந்து வா’
கோபப்பழம் சிவந்தது

அந்த பிஞ்சுக் கரங்கள்
தன் ரொட்டித் துண்டை
தூக்கி வந்து அவன்
தட்டில் போட

தேங்கியக் கண்ணீரை
துடைக்கத் துணியின்றி
முத்தமிட துடித்த உயிரி
எலும்பு கண்ட
பெட்டை நாயாய்
மூலையில் ஒடுங்கிச்
சிரித்தது நன்றியோடு

இந்த
ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண
அந்தக் கிளிகள்
தயாராயிருக்க

நெருப்புக் கோழிகளே…
உந்தன் தீஞ்சுவையை
அதன் மேல்
திணிக்காமலிருப்பதே
நிந்தன்
தலையாய தர்மமன்றோ…

சல்லிகள்

வாழைப் பழமென்று
வலிக்காமல்
ஏற்றிடுவார் ஊசியை - அந்த
பழம் நழுவி தன் வாயிலும்
விழுமென அறியாதார்

மாற்றாந் தோட்டத்து
மல்லிகை
மணந்து வீசினாலும்
என் வீட்டு ரோஜாதான்
இளமையென
அடித்துச் சொல்வார்

இருளுக்குள்
போடும் வேஷம்
வெளிச்ச மேடையில்
அரங்கேறுமென அறியாதார்

கனவிலும் கற்பனையிலும்
மிதந்து கொண்டே
தூங்கித்தூங்கி
விழித்திடுவார்

காரியமே கண்ணென்று
கடைசியில் கழனியிலே
கைவிடுவார்

வேரூன்றி விழுதுகள்
விட்டாலும் இவர்கள்
சல்லிகளே!

சனி, 31 அக்டோபர், 2009

திங்கள், 12 அக்டோபர், 2009

மறதி


புழுங்கிக் கிடக்கும்
மனதிற்கு
விடுதலை

புகை



உயிர்
அணுக்களின் விதியை எழுதும்
அனுபூதியே...
உன் அடுப்பூதிய வாய்கள்
கருப்பையில் சிதைந்து கிடக்கும்
கணுக்களுக்கும் தீமூட்டவா
புகையை இழுத்தூதுகின்றன?

புதன், 30 செப்டம்பர், 2009

மனசாட்சி


விழிகளின்
குழிகள்…
உணர்வுகளின்
இறுக்கங்கள்...
உறவுகளின்
தேக்கங்கள்...
மனற்கேணியின்
மேடு பள்ளங்கள்…
வலியின்
வடிகால்கள்...
என்றுலாவியே
பார்வைகளும் பழுதாகிறது
முடிசூடாமேல
மூக்கும் ந‌ட‌க்கிற‌து
எங்கே சென்றாய்
மனசாட்சியின்றி...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மொட்டு




திங்கள், 28 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம்

நடந்துச் செல்லும் நதியைக் கேட்டேன்
விழுமின் எழுமின் என்றது

சிறகடித்துப் பறக்க நினைத்தேன்
நில் கவனிச் செல் என்றது

வானச்சல்லடை சளித்துக் கொட்டும்
மழையைக் கண்டேன்
தனித்திரு ஆனால் சேர்ந்திரு என்றது

நகர்ந்துச் செல்லும் மேகக் கூட்டம் கண்டேன்
காத்திரு ஆனால் பசித்திரு என்றது

எது வேண்டாம்
இரத்தத்தைப் பிரித்துப் பார்க்கும்
அன்னப்பறவைகள் வேண்டாம்

இருட்டுத் தோலின் நிறம் பார்த்துக்
கொக்கரிக்கும் சேவல்கள் வேண்டாம்

கற்பனைக்குயவன் தட்டித் தட்டிச் செய்த
கெளரவச் சட்டி வேண்டாம்

ஊர்க்குருவிகளைப் பருந்தாக்கும்
விஞ்ஞானம் வேண்டாம்

விட்டமின்களை ஓரந்தள்ளி விரைவுணவோடு
விண்மீன் பிடிக்க வேண்டாம்

நட்சத்திரங்கள் விழுவதால்
நிலவுக்குக் கோபம் வேண்டாம்

பண மரத்தடியில் உட்கார்ந்து
பால் குடிக்கும் கழுகுகள் வேண்டாம்

மனித நாவுகளை வேட்டையாடும்
நாகரிகக் கோமாளிகள் வேண்டாம்

ஆசைக்குச் சாணைப் பிடிக்கும்
அறிவுக் கொலை வேண்டாம்

புரண்டு புரண்டு படுக்க வைக்கும்
ஞாபகப் புழுக்கள் வேண்டாம்

இஞ்சி டீயும் கிரீன் டீயும்
கரைக்காத கொழுப்பு வேண்டாம்

மருந்தை உணவாக்கி இயற்கையை
இடுகாட்டில் புதைக்க வேண்டாம்

அலங்காரச் சித்திரங்களைத் தேடி
சுவர்கள் தள்ளாட வேண்டாம்

இன்னும் எது வேண்டாம்
என்னை என்னிலிருந்து
பிரிக்கும் நுண்ணறிவு வேண்டாம்

ஓயாது அடிக்கும் மாய அலையில்
அலைக்கழிக்கும் இந்த
அழுக்கு ஜன்மம்இனி வேண்டவே வேண்டாம்

இனி அடுத்த ஜென்மத்திலாவது
பூ பூவாக பூத்துக் குலுங்கட்டும்…

சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இரைப்பை நிரப்ப
கோணிப்பையோடு
குப்பையை
சீய்க்கும்
கோழிகள்


வியாழன், 27 ஆகஸ்ட், 2009


உன் வருகையில்
அரும்புகிறது
என்னுள் நீ
நட்டு வைத்த மரம்

சனி, 22 ஆகஸ்ட், 2009

கடிகாரம்


இந்த ரோஜாவிற்குள் முட்கள்,
நாட்களை கடத்துகிறது


யாருக்காக


இருந்தும் மணக்கிறது
இறந்தும் மணக்கிறது
யாருக்கெனத் தெரியாமலே...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

யாரிவள்?

என்னிலிருந்து வந்தவள்?
என்னை நுழைந்து பார்த்தவள்?
என் புள்ளிகள் வரைந்த கோலம்?
என் உயிரோவியம்?
என் பிரதி?
என் நம்பிக்கை?
என் ஊன்றுகோல்?
என் விதையில் பூத்த பூ ?
என் அறுவடை?
என்னைப் பிரிந்து நிற்கும் நிழல்?
என் மகள் என்ற பெயரில்
வளர்ந்து நிற்கும் யாரிவள்?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

விண்மீன்


விண்மீன்களே
நீர்
விண்ணில் முளைத்ததனால்
தப்பித்தீர்,
தவறி
மண்ணில் முளைத்திருப்பின்
உம்மையும்
கருவாடாக்கி
பையில் போட்டு
விற்றிருப்பர்

புதன், 5 ஆகஸ்ட், 2009

பாரினைக் காக்கும் பசுமை





















திங்கள், 27 ஜூலை, 2009

நெருப்பில் தெரியும் நிலவு முகம்


இதயக்கோயிலில்
ஏற்றி வைத்த தீபமொன்று
முருங்கிப் போனத்திரியில்
தள்ளாடி நிற்க
வீசியடித்தக் காற்று
அதையுந் தட்டிச் சென்றுவிட

இருளுக்குளந்த இறைவனே
இறங்கி வந்து புது நெய்யில்
நல்ல திரியிட்டு
ஏற்றி வைத்துச்
சென்றதாகச் சொல்ல
நிலவில் பார்வை பதித்து
தீபம் சுடர்விட்டு எரிகின்றது

அந்த நிலவின் முகத்தை
மேகக்கரங்கள் தழுவினாலும்
என் கருவறைக்கதவுகள் மட்டுமின்னும்
திறந்தேக் கிடக்கிறது
இந்த நெருப்பிலாவது
தெரியுமா
அந்தக் கடவுளின் முகமென... J


ஞாயிறு, 19 ஜூலை, 2009

எனக்காக

கருவில் பிறந்து
இந்த மொட்டு
இன்னும்
துடிக்கிறது
எனக்காக...
Heart Glitter Graphics

செவ்வாய், 14 ஜூலை, 2009

உறங்கிடும் பூ


மகரந்தத்தில் மயங்கி
பூவுக்குள்
உறங்கிடும் பூவே
தேடலை நாடி ஓடி
வெடித்துச்சிதறிய
பஞ்சுகளுக்குள்ளே
தூக்கத்தை
தேடித் தேடி
கிட்டவில்லை இன்னும்
அமைதியான உறக்கம்
நீயாவது
நிம்மதியாய்
தூங்கிடு

ஞாயிறு, 12 ஜூலை, 2009


கிழட்டு யானையின்
முரட்டுப்பிடியில்
சிக்கித் தவித்த குருவி
திடீரென்று முதுகில்
குத்தி பறந்துச் செல்ல
கழுதைகள் படை சூழ
நகர்வலம் போய்
மூக்குடைந்த யானை
நிர்வாணமாய் நடுத்தெருவில்...

அறு



பேனாக் கத்தி
அறுக்கலாம்

பேனாவும்
சில நேரங்களில் நீயும்

எப்படி?

வியாழன், 2 ஜூலை, 2009

வெறுமை

Image and video hosting by TinyPic
வெள்ளைச் சுவற்றின்
கிறுக்கல்கள்

கிழித்தெறியும்
தாட்கள்

கசக்கிப் போடும்
காகிதங்கள்

கிறுக்கித் தள்ளும்
பென்சில் முனைகள்

கலைந்து கிடக்கும்
புத்தகங்கள்

வரைந்து தள்ளும்
கோட்டோவியங்கள்

வெறித்துப் பார்க்கும்
கரடி பொம்மை

கார்ட்டூனின்
கேள்வி பதில்கள்

பாடங்கேட்கும்
மிக்கி மவுஸ்

சொல்லச்சொல்ல
சொல்லுங் கிளி

விசிறி எறியும்
விளையாட்டு சாமான்கள்

மெளன மொழி
பேசும் விழிகள்

அத்தனையும் சொல்கிறது
இவளின் வெறுமையை

அசைந்தாடும்
பூங்கொடியாள்
முகத்தில்
துள்ளியோடும்
பட்டாம்பூச்சி

செவ்வாய், 30 ஜூன், 2009

அப்துல் ரகுமான்

கூலிக்கு மாரடித்து
சொற்களைப் பொறுக்கி
எடைபோட்டு
சுடச்சுட வரிகளாக்கி
கூவிக் கூவி விற்போரிடையே

சொல்லோடு பொருள் உரச
வார்த்தைகளைப் பிளந்து
வைரக்கற்களை
வீதிகளில
விசிறி எறிந்தவன்

திங்கள், 29 ஜூன், 2009

இருள் தந்த வெளிச்சம்




வண்ணங்களைக்
கரைத்து
அடுக்கி வைத்தக்
கிண்ணங்களில்
ஊற்றி வைத்தேன்

மயிலிறகை
ஈர்க்குச்சியில் முடிந்து
வண்ணக் கலவையில்
முக்கியெடுத்து
வெற்றுப் பலகையில்
வரைய முனைந்தேன்

விரலை விட்டு
இறங்கிவர மறுத்து
துவண்டுப்போன தூரிகைக்குள்
ஓவியம்
நொண்டியடித்தது

அத்தனை வண்ணங்களையும்
அள்ளியெறிந்து
அண்ணாந்துப் பார்த்தேன்
செல்லரித்த சுவற்றினூடே
ஓர் உயிரோவியம்
மெல்ல நகர்ந்துச் செல்ல
அந்த இருளில்
விழிகள் மட்டும் வெளிச்சமாய்….

வெள்ளி, 26 ஜூன், 2009

நீ


என் வாழ்க்கைப்
புத்தகத்திற்கு
முகவரியானாய்

தாறுமாறாய் கிடந்த
தலையங்கத்தை
ஒட்ட வைத்தாய்

எழுத்துக்களைப்
பின்னி
வலைப் பூவாக்கினாய்

உன் கிறுக்கலில்
நவீன ஓவியமானேன்

நீ ஒற்றைச் சொல்
உணர்ச்சிக் காவியமானாய்

புத்தகத்தைத் திறந்து பார்த்தேன்
ஒரு சில பக்கங்கள் மட்டும்
ஏன் இன்னும்
எழுதப்படாமலே
வெற்றிடமாய் ...

திங்கள், 22 ஜூன், 2009

பயணம்

தண்டவாளத்தில்
கைகோர்த்து தனித்தனியே
பயணம் செய்கிறது
வாழ்க்கை

குறுக்குத்தடத்தில்
வழிமாறினாலும்
சுமைதாங்கியே
பயணம் நீள்கிறது

நீட்சிகளின் முடிச்சி
மெளனங்களில்
கரைந்தாலும்
இந்த வண்டி
ஓடிக்கொண்டேயிருக்கிறது

பூமாலைகள்


பிறப்பின்
பரிணாம வளர்ச்சியை
ஞாபகப்படுத்தோடு
பின்பற்றி
கையில்
பூமாலைகளோடு
அரச மர நிழலில்

வெறுந்தரையில்


புற்களோடு பனித்துளிகள்
மோகத்தில் திளைத்திருக்க

வெடித்துச்சிதறிய
பஞ்சுகளோடு
வண்ணத்தூரிகைகள்
மூச்சுமுட்ட சிக்குக்கோலங்களை
வரைந்து தள்ளின

கார்மேகம் புறப்பட்டு
காலாட்படையோடு
வந்து சென்றது

போர் ஓய்ந்துவிட்ட
வேளையில்
அந்த
அதிகாலையை
வெறுந்தரையில்
தேடுகிறேன்

திங்கள், 15 ஜூன், 2009

குயில் கூவும் சத்தம்

ஏழிசையை சுரத்தோடு பாடுகையில்
தாளம் மட்டும் தப்பிச் சென்றது

தேடிப்பிடித்து வந்த ஆந்தை
கண்விழித்து காவல் காத்தது

கண்மூடிய வேளையி்ல்
பச்சைக்கிளி பறந்து வந்து
கொஞ்சும் மொழி பேசியது
மூக்குடைந்த கிளி
நொண்டிச் சென்றபின்
அங்கே ஒரு குயில் மட்டும்
கூவும் சத்தம் இன்னும் கேட்கிறது

வெள்ளி, 12 ஜூன், 2009

நான்

மெழுகுவர்த்தியை
அணைத்தேன்
நிலவைக் கண்டேன்
‘தான்’ உருகி வழிந்தோட
அந்த இருளுக்குள்
‘நான்’ வெளிச்சமானேன்

உயிர் மரத்தை உலுக்கி...

மாதக்கணக்கில்
சுமக்காமல்
கணநேரத்தில் பெற்றுப்
போடுகிறேன்

ஒருசில தொட்டிலில்
மற்றவை அனாதைகளாய்

சிலவற்றைத்
தாலாட்டுகிறேன்
மற்றவற்றை
கருக்கலைப்பு செய்கிறேன்

நாட்கள்
சிலநேரமென்னை மலடியாக்குகிறது
பலநேரெமனக்குக் கிரீடம் சூட்டுகிறது

இவளுடனான மோகத்தில்
என் ராத்திரிகள் கரைகின்றன

இதயக்குழாயடியில்
புதுரத்தம் குடிக்க அந்த
நரம்புக் குடங்கள்
வரிசையில் காத்துக்கிடக்கையில்

உயிர்மரத்தை உலுக்கி
பெற்றுப்போட்ட களைப்பில்
மூச்சுவிடவும் மறந்து போகிறேன்

இன்பா

அழகானப் பொய்

அழகான முடிச்சுகளின்
நெளிவு சுளிவுகளோடு
பட்டுக்குள் ஒளித்து
மோதிரப்பரிசு தந்தாய்

நாட்கள் தன்னைத்தானே
சுற்றி சூரியனை ஓர் வலம்
வந்து முடித்தபோது
பட்டுச்சேலை பரிசு தந்தாய்

குழந்தையொன்று
அம்மையப்பனைச்
சுற்றி வந்து நின்ற போது
பருத்திச்சேலை பரிசு தந்தாய்

அடுத்தடுத்தாண்டுகளில்
வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகளோடு
காகிதப் பரிசானது

பரபரவென்று
பத்தாண்டைத் தொட்டுவிட்டது
பத்து பவுன் நகையோடு நீ
வருவாயென இருந்தேன்

பத்திரமாற்றுத் தங்கம்
நானே பரிசாக என்றாய்

தேய்பிறையில்
தொய்ந்த நிலவுக்கு
இந்தப் பொய்யும்
அழகானது தான்

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தேவதைகள்

எலும்புத் துண்டை தூக்கி
எறிந்தால் வாலாட்டும்
நாய்கள் என நரிகள் களிக்க
குள்ள நரி சாயம்

வெளுத்துப்போச்சு
டும் டும் என
நாய்கள் கொண்டாட
நரிகள் ஊளையிட
நாய்கள் குரைக்க

கூத்தாடிகளுக்குக்
கொண்டாட்டம்
நடுத்தெருவில்
தேவதைகள்
திண்டாட்டம்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

நார்வே நடந்து பார்த்தது
அமைதிப்புறா அலைந்து பார்த்தது
அகிம்சை அல்லல் பட்டது
ஆயுதம் தலை தூக்கியது
புலிகள் பதுங்குவது
பாய்வ‌த‌ற்கென்றாலும் கிளிகளின்
சிறகொடியும் ஒலிகள் கேட்கிறதா
வலிக்கிறது மனம்
சிறை பிடித்த
சீதையின் துயர்துடைக்க
அனுமன் சென்றான் தூது
முன்தோன்றிய
மூத்தக்குடி காக்க அதிபதிகள்
அணுவைக் கூட அனுப்பவில்லை தூது
முல்லைக் காடு இடுகாடாகிறது

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக்குமரன் -இலங்கையில் போர்நிறுத்தக் கோரி தீக்குளித்தவர்

அங்கேச் சுடுகிறான்
இங்கே சுட்டுக்கொண்டாய்

உன்னைப் பறித்தது
தமிழ்ப் பற்றோ
அரசியல் பற்றோ
நாட்டுப் பற்றோ...
உன் உயிர்ப் பற்று
எங்கேப் போனது?

பத்தோடு பதினொன்று
அத்தோடு நீயுமொன்றென
துதி பாடி
இரங்கற்பா எழுதிவிட்டு
தூசி தட்டி துப்பாக்கித்
தூக்கிவிட்டான்

ஆட்டுமந்தைபோல்
கை கால் இழந்து
பாம்புக் கடி மறத்தவனை
ஓருயிர்
சரித்திரம் மாற்றிவிடுமென
தப்புக் கணக்குப் போட்டாயே?

சாதிக்கப் பிறந்தவன் நான்
சாகப் பிறந்தவனில்லை யென
பாசக்கொடி நீ தூக்கி
அடக்குமுறையை
அடக்கம்
செய்ய மறந்தாயே?

உனக்கு நீயே
கொள்ளியிட்டாய்
உன் குடும்பத்தை
தவிக்கவிட்டாய்
உன் இழப்பைத் தவிர
வேறென்ன லாபம்?


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

துடுப்புகள்

உறங்கி கிடக்கும்
சொர்க்கத்தை உசுப்பிவிட
அறிவுக் கடலில் ஆழம் தேடி
உறங்கிப் போன மனிதர்களுக்கு
ஒளிந்து கிடக்கும் உண்மைகளை
அமிழ்ந்து போகும் அமுதங்களை
அடையாளம் காட்டத் துடிக்கும்
ஞானத் துடுப்புகள்
பேனா முட்களுடன்...

சனி, 31 ஜனவரி, 2009

நான்

தெரியுமென்றேன்
தேடுதல் குறைந்தது

வேண்டாமென்றேன்
தௌpவு குறைந்தது

முடியாதென்றேன்
திறமை குறைந்தது

மேம்போக்காகவிருந்தேன்
உற்சாகம் குறைந்தது

பகிர்ந்து கொண்டேன்
அனுபவம் கிடைத்தது

திருத்திக் கொண்டேன்
தவறுகள் குறைந்தது

உணர்ந்து கொண்டேன்
அறிதலின் இரகசியத்தை

புரிந்து கொண்டேன்
அறிவுப்பசி தான்
ஆழ உழுமென்று

நம்பிக்கை


பாலும் தேனும்
பார்த்து பார்த்து
ஊட்டவில்லை

அந்தக் கால்
இந்தக் கால்
பந்தக் கால்
பாசக்கால்

என எந்தக் காலும்
வேண்டாமுன்
சொந்தக் காலில் நில்
என ஊட்டி
வளர்த்ததால்தானோ
என்னவோ

நாற்றங்காலை
நாடு மாற்றி
நட்டபின்னும்
ஒட்டுறவின்றி
ஒற்றைக்காலிலும்
ஊன்றி நிற்கின்றேன்

பிரிவு

விழியோடு விரல்
பேச நேரமில்லை
விழியின் கசிவைத் துடைக்க
விரலுக்கு நேரமில்லை
விரலின் வீக்கம் காண
விழிகளுக்கு நேரமில்லை
உனக்கு நொட்டப்
பார்வையென விரலும்
நீ குட்டிக்கொண்டேயிரு
என விழியும் கட்டிப்புரண்டபின்
இனி விரலுக்கும்
விழிக்குமேது பந்தம்










வியாழன், 29 ஜனவரி, 2009

நிழல்கள்

என்னைப் பின் தொடரும்
நீ உளவாளியா அல்லது
கரும்பூனை காவலாளியா

நடந்தால் நடக்கிறரய்
நின்றரல் நிற்கிறரய்
நான் சொன்னபடி கேட்கும்
ஒரே ஜPவன் நீ

கருப்பு மையில் வார்த்தெடுத்த
என் குளோனிங்
என் இருண்டப் பக்கம்

இரவைக் கண்டால்

ஒட்டிக் கொள்கிறரய்
இரவியைக் கண்டால்
ஓடி விடுகிறhய்

நான் நிற்கும்போது
நீ மட்டும் படுத்திருக்கிறரயென
உன்னைத் துரத்தி துரத்தி
மிதிக்க முனைந்த நாட்கள்
இன்னும் நினைவில்

திட்டினாலும் அழுவதில்லை
வெட்டினாலும் நகர்வதில்லை
நாம் ஒட்டிப் பிறந்த
இரட்டைப் பிறவிகள்

ஆனால் ஆச்சர்யம்
எனக்கில்லாத பொறுமை
உனக்கு மட்டுமெப்படி


இருளைக் கொளுத்தும்

விளக்குகள்

தீவிரவாதம்


நாலு கழுதை வயாசானாலும்
நாலு மணிக்கு எழுந்து
புளோக்கை
கூட்டிப் பெருக்கி
கழுவி துடைச்சி
வாசலுக்கு வரும்
லட்சுமியை வரவேற்க
புள்ளிப் போட்ட
வெள்ளை போர்வை
எலும்பை மறைக்க
மாக்கோலம் போட
மறந்து போய்
வியந்து நிற்கும்
சீனப்பாட்டி

புதன், 28 ஜனவரி, 2009

நேற்று
Beautiful என்றரல் என்ன அர்த்தம் அப்பா ?
அழகு என்று பொருள்டா கண்ணா.. -
இன்று
அழகு என்றரல் என்னர்த்தம் அம்மா ?
Beautfiful டா செல்லம்
நாளை
Friends do you know what is Alagu?
don't need to know lah
you just know the word enough lah