Flowers - Myspace Glitters

புதன், 4 நவம்பர், 2009

தீஞ்சுவை

‘மெக்டனால்டு’ வாசலி்ல்
நி
ன்

கூட்டம் திடீரென
கலைந்தது

பட்டுப்பூச்சி
பறந்து வந்ததோ
திரும்பிய போது
எண்புதோல் போர்த்தி
நடந்து வந்த உயிரி
வரிசையில் நிற்க…

கலைந்தது கூட்டம்
உனக்கு விற்பனையில்லையென
கடைக்காரன் விரட்டியடிக்க
வாசலில் வந்தமர்ந்தான்

பரதேசிக்கு
‘பர்கர்’ ஒரு கேடா
தொடை தட்டி
‘தடா’ போட்டதொருக் கூட்டம்

பிஞ்சு மொழி
கேட்டதங்கே
‘அவர்கள் சாப்பிட்டால்
தவறா’ வென

‘உன் தட்டைப் பார்த்து
சாப்பிட்டு விட்டு
எழுந்து வா’
கோபப்பழம் சிவந்தது

அந்த பிஞ்சுக் கரங்கள்
தன் ரொட்டித் துண்டை
தூக்கி வந்து அவன்
தட்டில் போட

தேங்கியக் கண்ணீரை
துடைக்கத் துணியின்றி
முத்தமிட துடித்த உயிரி
எலும்பு கண்ட
பெட்டை நாயாய்
மூலையில் ஒடுங்கிச்
சிரித்தது நன்றியோடு

இந்த
ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண
அந்தக் கிளிகள்
தயாராயிருக்க

நெருப்புக் கோழிகளே…
உந்தன் தீஞ்சுவையை
அதன் மேல்
திணிக்காமலிருப்பதே
நிந்தன்
தலையாய தர்மமன்றோ…

சல்லிகள்

வாழைப் பழமென்று
வலிக்காமல்
ஏற்றிடுவார் ஊசியை - அந்த
பழம் நழுவி தன் வாயிலும்
விழுமென அறியாதார்

மாற்றாந் தோட்டத்து
மல்லிகை
மணந்து வீசினாலும்
என் வீட்டு ரோஜாதான்
இளமையென
அடித்துச் சொல்வார்

இருளுக்குள்
போடும் வேஷம்
வெளிச்ச மேடையில்
அரங்கேறுமென அறியாதார்

கனவிலும் கற்பனையிலும்
மிதந்து கொண்டே
தூங்கித்தூங்கி
விழித்திடுவார்

காரியமே கண்ணென்று
கடைசியில் கழனியிலே
கைவிடுவார்

வேரூன்றி விழுதுகள்
விட்டாலும் இவர்கள்
சல்லிகளே!