Flowers - Myspace Glitters

புதன், 30 செப்டம்பர், 2009

மனசாட்சி


விழிகளின்
குழிகள்…
உணர்வுகளின்
இறுக்கங்கள்...
உறவுகளின்
தேக்கங்கள்...
மனற்கேணியின்
மேடு பள்ளங்கள்…
வலியின்
வடிகால்கள்...
என்றுலாவியே
பார்வைகளும் பழுதாகிறது
முடிசூடாமேல
மூக்கும் ந‌ட‌க்கிற‌து
எங்கே சென்றாய்
மனசாட்சியின்றி...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மொட்டு




திங்கள், 28 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம்

நடந்துச் செல்லும் நதியைக் கேட்டேன்
விழுமின் எழுமின் என்றது

சிறகடித்துப் பறக்க நினைத்தேன்
நில் கவனிச் செல் என்றது

வானச்சல்லடை சளித்துக் கொட்டும்
மழையைக் கண்டேன்
தனித்திரு ஆனால் சேர்ந்திரு என்றது

நகர்ந்துச் செல்லும் மேகக் கூட்டம் கண்டேன்
காத்திரு ஆனால் பசித்திரு என்றது

எது வேண்டாம்
இரத்தத்தைப் பிரித்துப் பார்க்கும்
அன்னப்பறவைகள் வேண்டாம்

இருட்டுத் தோலின் நிறம் பார்த்துக்
கொக்கரிக்கும் சேவல்கள் வேண்டாம்

கற்பனைக்குயவன் தட்டித் தட்டிச் செய்த
கெளரவச் சட்டி வேண்டாம்

ஊர்க்குருவிகளைப் பருந்தாக்கும்
விஞ்ஞானம் வேண்டாம்

விட்டமின்களை ஓரந்தள்ளி விரைவுணவோடு
விண்மீன் பிடிக்க வேண்டாம்

நட்சத்திரங்கள் விழுவதால்
நிலவுக்குக் கோபம் வேண்டாம்

பண மரத்தடியில் உட்கார்ந்து
பால் குடிக்கும் கழுகுகள் வேண்டாம்

மனித நாவுகளை வேட்டையாடும்
நாகரிகக் கோமாளிகள் வேண்டாம்

ஆசைக்குச் சாணைப் பிடிக்கும்
அறிவுக் கொலை வேண்டாம்

புரண்டு புரண்டு படுக்க வைக்கும்
ஞாபகப் புழுக்கள் வேண்டாம்

இஞ்சி டீயும் கிரீன் டீயும்
கரைக்காத கொழுப்பு வேண்டாம்

மருந்தை உணவாக்கி இயற்கையை
இடுகாட்டில் புதைக்க வேண்டாம்

அலங்காரச் சித்திரங்களைத் தேடி
சுவர்கள் தள்ளாட வேண்டாம்

இன்னும் எது வேண்டாம்
என்னை என்னிலிருந்து
பிரிக்கும் நுண்ணறிவு வேண்டாம்

ஓயாது அடிக்கும் மாய அலையில்
அலைக்கழிக்கும் இந்த
அழுக்கு ஜன்மம்இனி வேண்டவே வேண்டாம்

இனி அடுத்த ஜென்மத்திலாவது
பூ பூவாக பூத்துக் குலுங்கட்டும்…

சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை