Flowers - Myspace Glitters

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக்குமரன் -இலங்கையில் போர்நிறுத்தக் கோரி தீக்குளித்தவர்

அங்கேச் சுடுகிறான்
இங்கே சுட்டுக்கொண்டாய்

உன்னைப் பறித்தது
தமிழ்ப் பற்றோ
அரசியல் பற்றோ
நாட்டுப் பற்றோ...
உன் உயிர்ப் பற்று
எங்கேப் போனது?

பத்தோடு பதினொன்று
அத்தோடு நீயுமொன்றென
துதி பாடி
இரங்கற்பா எழுதிவிட்டு
தூசி தட்டி துப்பாக்கித்
தூக்கிவிட்டான்

ஆட்டுமந்தைபோல்
கை கால் இழந்து
பாம்புக் கடி மறத்தவனை
ஓருயிர்
சரித்திரம் மாற்றிவிடுமென
தப்புக் கணக்குப் போட்டாயே?

சாதிக்கப் பிறந்தவன் நான்
சாகப் பிறந்தவனில்லை யென
பாசக்கொடி நீ தூக்கி
அடக்குமுறையை
அடக்கம்
செய்ய மறந்தாயே?

உனக்கு நீயே
கொள்ளியிட்டாய்
உன் குடும்பத்தை
தவிக்கவிட்டாய்
உன் இழப்பைத் தவிர
வேறென்ன லாபம்?