புதன், 4 ஆகஸ்ட், 2010

தாஜ்மகால்



கற்களில் பட்டை தீட்டிய வைரம் நீ !
சொற்களில் நீட்டமுடியாக் கவிதை நீ !

உயிருக்குள் ஒளிந்திருக்கும் காவியம் நீ !
கல் வரைந்த காதல் ஓவியம் நீ!

ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
அமைதிப் புறா நீ!

எந்தச்சாயமடித்தாலும் காதல்
வெளுத்துவிடுமெனச் சொல்லும்
வெள்ளை ரோஜா நீ !

கல்லறை வரை காதலிக்கச் சொல்லும்
மெழுகுப் பாறை நீ !

காதல் உலக அதிசயமல்ல
அவசியமென உணரவைத்த பளிங்குப்பூ நீ!

நதியோரம் பிறந்த அதிசயமே...
நானூறு ஆண்டுகளைக் கடந்தும் உன் காதல்
நித்திரையிலும் நிமிர்ந்து நிற்கு்ம் ரகசியம் என்ன?

காலம் சென்றாலும் காதல் நிலைக்குமென
உன் கற்கள் உரசி நிற்பதில் தெரிகிறது

காதல் வந்தால் மனசு இளமையாகிறது

எல்லோரும் தேடுகிறோம்
என்றென்றும் காதலோடு இளமையும் வேண்டுமென