Flowers - Myspace Glitters

புதன், 17 மார்ச், 2010

முதல் குழந்தை

புத்தனே
ஆசையைத் துறக்கும் மனசை
அப்படியே கொண்டு வா

வள்ளுவனே
அறத்தோடு பொருளையும் காக்கும்
பொறுமையை கொண்டு வா

அண்ணலே
சத்தியத்தை உருக்கி வந்து
நல் சக்தி கொடு

விநாயகா
அடங்காப் பசியோடு
அழியாத உடலைத் தூக்கி வா

நபியே
கருங்கூந்தலோடு
நற்குணச் செடிகளையும் நட்டு வை

ஏசுவே
அன்பெனும் போதிமரத்தை இவள்
பக்கத்தில் ஊன்றி வை

ஓ... நல்லோர்களே
அத்தனையும் கொண்டு வந்து
இந்த மர்மக்குகைக்குள் திணித்திடுங்கள்

உப்பு நீரைக் கீறிக்கொண்டு
நல்முத்து வந்து பிறக்குமென்றேன்

நீ பூத்து முடிப்பதற்குள் ஒவ்வொரு
நொடிக்குள்ளும் நூல் நூத்துக் கிடந்ததடி

தங்கமே
அத்தனையும் தாங்கி வருவாயென
என் மனக்கோட்டை திறந்தே கிடந்ததடி

மலர்க்குடையாய் பறந்து
என்னுள் இறங்கி வந்தாய்

அவசரத்தில் என்னை மட்டும்
உரித்து வைத்ததென்னடி

எட்டி உதைத்தவளே
என்னுயிரைத் தின்றவளே

என்னுள் நீயிருந்த நாட்கள்
இன்னும் இனிக்குதடி

கண்ணும் மூக்கும் வைத்து
வரைந்து பார்த்தேன்

காவியமாய் நீ வந்து
என்னுள் கலந்தாயடி...

3 கருத்துகள்:

panasai சொன்னது…

என்னுள் நீயிருந்த நாட்கள்
இன்னும் இனிக்குதடி>......

nice.. ella tharappaiyum kavarum kavithai.. vaazthukkal..

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பாலு மணிமாறன் சொன்னது…

உண்மையை எப்படி எழுதினாலும், எப்ப எழுதினாலும் அழகாத்தான் இருக்கு!